close
Choose your channels

சமாதானம் பேச வந்த சிபி: அக்சராவின் ரியாக்சன் என்ன?

Wednesday, November 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று வெளியான இரண்டு புரமோ வீடியோவிலும் அக்ஷரா மற்றும் சிபி இடையே மோதல் போக்கு நடந்த நிலையில் தற்போது வந்துள்ள மூன்றாவது புரமோவில் அக்சராவிடம் சிபி சமாதானம் பேச வந்த காட்சிகள் அடங்கியுள்ளன

அக்சராவிடம் சமாதானம் பேச வந்த சிபியிடம், ’நீங்கள் பேசிய முறை எனக்கு பிடிக்கவில்லை, அதன்பிறகு நீங்கள் நடந்து கொண்டதும் தேவை இல்லாதது போல் எனக்கு தெரிந்தது. இதற்கு மேல் உங்களிடம் பேச எனக்கு விருப்பமில்லை’ என்று அக்சரா கூறுகிறார்

அதற்கு பதிலளித்த சிபி, ‘அதனால் நீங்கள் தூக்கி போட்டு எல்லாவற்றையும் உடைத்து விட்டு போய் விட்டீர்கள். நீங்கள் உள்ளே வருகிறீர்களா? இல்லையா? என்பதை என்னிடம் சொல்லி விடுங்கள். உங்களுக்காக தனியாக நான் எதுவும் செய்யவில்லை. எல்லோரிடமும் செய்ததை தான் உங்களிடம் காட்டியுள்ளேன். அப்படிதான் இருக்கும். அவ்வாறு நினைத்து வந்தால் உள்ளே வாருங்கள். இல்லாவிட்டால் உங்கள் இஷ்டப்படி இருந்து கொள்ளுங்கள். ஒருவேளை உள்ளே வரவில்லை என்றால் என்னுடைய கேரக்டர் படி என்ன செய்ய வேண்டுமோ, அதை நான் நான் செய்வேன் என்று கூறினார். அதற்கு அக்சரா ‘சரி’ என்று கூறியதுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வந்துள்ளது.

சிபி, அக்சரா பிரச்சனை இன்றுடன் முடியுமா? அல்லது நாளையும் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.