close
Choose your channels

யார் அந்த கருப்பு ஆடு? ஆவேசத்தில் கத்திய சஞ்சீவ்!

Friday, December 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் ’அரசியல் மாநாடு’ டாஸ்க் நடைபெற்றது என்பதும் மூன்று அரசியல் கட்சிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்சியிலும் நான்கு உறுப்பினர்கள் விளையாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றுடன் டாஸ்க் நிறைவு பெறும் நிலையில் எந்த கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தது என்ற வாக்கெடுப்பு நடைபெற்றது.

இமான் அண்ணாச்சியின் நியாயத்தைப் பேசும் மக்கள் கட்சியும், சிபியின் மக்கள் முன்னேற்ற கழகமும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. பிரியங்காவின் உரக்கச் சொல் கட்சி தனித்து போட்டியிட்டது. வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கையில் இமான் அண்ணாச்சி மற்றும் சிபி இணைந்த கூட்டணிக்கு 7 வாக்குகளும் பிரியங்காவின் உரக்கச் சொல் கட்சிக்கு 5 வாக்குகளும் கிடைத்தது.

இதனை அனைத்து இமான் அண்ணாச்சியின் வெற்றியை சக போட்டியாளர்கள் கொண்டாடினாலும் இரண்டு கட்சிகள் கூட்டணி சேர்ந்திருப்பதால் அந்த கூட்டணிக்கு 8 ஓட்டுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 7 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்ததை அடுத்து இமான் அண்ணாச்சி ’யார் அந்த கருப்பு ஆடு’ என்று கேட்கிறார். அதேபோல் சஞ்சீவியும் ‘எவன்டா அவன்? என்று கத்தும் காட்சிகளோடு இன்றைய புரொமோ முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில் யாரோ ஒருவர் பிரியங்காவின் உரக்கச் சொல் கட்சிக்கு மாற்றி ஓட்டு போட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த கருப்பு ஆடு யார்? என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos