close
Choose your channels

அமீரிடம் நிரூப் கேட்ட சாட்டையடி கேள்வி!

Wednesday, December 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீரிடம் நிரூப் கேட்ட சாட்டையடி கேள்வியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பதும், தற்போது இந்த டாஸ்கில் பிரியங்கா, சிபி, சஞ்சீவ், அமீர் மற்றும் ராஜு ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் வெற்றி பெறக்கூடாது என்று நீங்கள் நினைக்கும் நபர் யார் என்பது குறித்து பிக்பாஸ் கேட்கிறார். அதற்கு பிரியங்கா, ‘யார் ஜெயிக்க கூடாது என்று என்னால் சொல்ல முடியாது, நான் தோற்றுப் போனாலும் பரவாயில்லை என்று தன் மீதே கலரை அடித்துக் கொள்கிறார்.

அதன்பின் நிரூப் மற்றும் பிரியங்கா வாதிடும் காட்சிகள் உள்ளன. இந்த டாஸ்கில் நீங்கள் உண்மையாக விளையாடுனீர்களா? என்றால் என்னை பொருத்தவரை கிடையாது என்று தான் சொல்வேன் என கூறுகிறார். அதற்கு பிரியங்கா, ’உன்னுடைய கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியா’து என்று வாதாடுகிறார்.

அதன் பின் அமீரிடம் செல்லும் நிரூப், ‘நான் தகுதி இல்லாதவன் என்று முடிவு செய்து என்னை வெளியே அனுப்பி விட்டீர்கள், அப்படி என்றால் நீங்கள் தகுதியானவர் என்பதை நிரூபித்து காட்டுங்கள் என்று சாட்டையடி கேள்வி கேட்க, அதற்கு அமீர் என்ன பதில் கூறினார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.