close
Choose your channels

ராஜூ-பிரியங்கா காரசாரமான மோதல்: கைதட்டிய அக்சரா!

Thursday, December 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் டாஸ்குகளை மிகவும் காரசாரமாகவும் விறுவிறுப்பாகவும் விளையாடி வருகின்றனர். போட்டியாளர்களுக்கு இடையே சண்டை சச்சரவு வாக்குவாதம் ஏற்பட்டு வருகின்றன என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் மாநாடு டாஸ்க்கில் ‘உரக்க சொல்’ என்ற அணி வெற்றி பெற்றுள்ளதாக பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனையடுத்து 3 அணிகளின் தலைவர்களுடன் இந்த டாஸ்க் குறித்து வாக்குவாதங்கள் நடைபெறுகின்றன.

இந்த வாக்குவாதத்தில் ’என்னை நீங்கள் சாஃப்ட் கேம் ஆடுகிறாய் என்றும் சேஃப் கேம் ஆடுகிறாய் என்றும் குற்றம் சாட்டினீர்கள். அந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் வேண்டும் என்று ராஜு பிரியங்காவிடம் கேட்க, அதற்கு பிரியங்கா ’நீங்கள் தேவையான மக்களுக்கு மட்டுமே குரல் கொடுத்தீர்கள், கேள்வி கேட்டிருக்கிறீர்கள், ஆனால் மற்றவர்கள் குறித்து பேசவில்லை என்று கூறுகிறார்.

அப்போது ராஜு ’என் கண் முன்னால் நடப்பது குறித்து பேசலாமா? பேசக்கூடாதா? என்று கேள்வி எழுப்ப, அதற்கு பிரியங்கா ’கண்ணு முன்னாடி நடப்பதைப் பற்றி பேசலாம், ஆனால் பப்ளிக்கா பேசுவது தப்பு இல்லை என்று கூற, ‘இந்த வீட்டில் பிரைவேட்டா ஒரே ஒரு ஏரியாவை நீங்கள் கூற முடியுமா? என்று ராஜூ கேள்வியெழுப்பியபோது அக்சரா மற்றும் பாவனி கைதட்டுகிறார்கள்.

இதை பார்த்து கடுப்பான பிரியங்கா, ‘நீ பேசியதை பார்த்து உன்னுடைய தோழி கைதட்டுகிறார் பாரு’ என்று கூறி கேலி செய்ய அதற்கு பாவனி பிரியங்காவை கண்டிக்கும் காட்சியுடன் இன்றைய முதல் புரோமோ முடிவுக்கு வருகிறது.

நேற்று தாமரை-அபினய் இடையே காரசாரமான சண்டை நிகழ்ந்த நிலையில் இன்று யார் யாருக்கும் சண்டை நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.