close
Choose your channels

இன்றைய டாஸ்க்கின் முடிவில் தாமரை மலருமா? உலருமா?

Tuesday, November 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அவங்களுக்கு மட்டும் தான் வாய் இருக்கா? எனக்கு வாய் இல்லையா? என இதுவரை அமைதியாக விளையாடிக்கொண்டிருந்த மதுமிதா திடீரென ஆவேசமாகி தாமரையுடன் சண்டை போட்ட காட்சிகளின் வீடியோ இன்றைய அடுத்த புரமோவில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரு மாதமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக தாமரை சக போட்டியாளர்களுடன் ஆவேசமாக மோதி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தனது காயினை எடுத்து விட்டதாக கருதி மற்றும் பாவனியுடன் சண்டை போட்ட தாமரை, கமல்ஹாசனின் அறிவுரைக்கு பின் சமாதானமனார்.

அதேபோல் அண்ணாச்சி உள்பட ஒருசிலரிடம் சண்டை போட்டு வரும் தாமரையின் அடுத்த குறி மதுமிதா போல் தெரிகிறது. ’இப்ப எதற்கு என்னை அவ இவ என்கிறாய் என்று தாமிரை கேட்க அதற்கு மதுமிதா, ‘அவ என்பது கெட்ட வார்த்தை இல்லை என்று கூறுகிறார். இதற்கு தாமரை கொஞ்சம் கத்திப் பேச, ‘எதற்காக இப்படி கத்துகிறீர்கள் உங்களுக்கு வாய் இருந்தால் எனக்கும் வாய் இருக்கும் என்று மதுமிதாவும் கத்தி பேச இருவருக்கும் இடையே மோதல் ஆவேசம் ஆகிறது

இந்த நிலையில் இன்றைய மோதல் தாமரைக்கு சாதகமாக மலருமா? அல்லது உலர்ந்த தாமரை போல் சண்டை புஸ் என ஆகுமா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.