close
Choose your channels

தாமரையுடன் காரசாரமாக மோதும் பிரியங்கா: அடுத்த எலிமினேஷனா?

Monday, November 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வாரங்களாகவே தாமரையுடன் மோதியவர்கள் எல்லிமினேஷன் ஆகி வரும் நிலையில் இந்த வாரம் பிரியங்கா தாமரையுடன் காரசாரமாக மோதுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில வாரங்களாக வெளியேறிய போட்டியாளர்கள் அனைவருமே கடைசி நேரத்தில் தாமரையுடன் மோதியவர்கள் என்பதும் இது தற்செயலாக நடந்ததா அல்லது தாமரையுடன் மோதியதால் தான் அவர்கள் வெளியேற்றப்பட்டார்களா? என்பது விவாதத்துக்குரிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. நேற்று வெளியேறிய இசைவாணி கூட கடைசி நேரத்தில் தாமரையுடன் மோதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் தாமரை மற்றும் பிரியங்கா கடுமையாக மோதிக் கொள்கின்றனர். தலைவராகும் தகுதி இல்லை என்று என்னை எப்படி நீங்கள் சொல்லலாம் என தாமரை பிரியங்காவிடம் கேட்க, அதற்கு ’வாய்ப்பு என்று வரும்போது தான் நீ அந்த கசப்புகளை சரி பண்ணனுமா? அதற்கு முன்னர் சரிசெய்து கொள்ளலாமே என்று பிரியங்கா கேட்க, அதற்கு ‘எந்த கசப்பு என்பதை சொல்லுங்கள்’ என தாமரை கேட்கிறார்.

’மனதில் பட்டதை சரியாக சொல்லுங்கள், என்ன கசப்பு என்னிடம் உள்ளது என்று தாமரை கேட்க அதற்கு பிரியங்கா பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றார். மேலும் ’ இன்றைய சூழ்நிலையில் உனக்கு தலைவராகும் தகுதி இல்லை என்று பிரியங்கா சொல்ல, ‘அதை சொல்லும் தகுதி உங்களுக்கு இல்லை’ என்று என்று தாமரை பதிலடி கொடுக்க இருவரும் காரசாரமாக மோதிக் கொள்ளும் காட்சி இன்றைய 2-வது புரமோவில் உள்ளது.

இன்றைய நாமினேஷனில் பிரியங்கா, தாமரை இருந்தால் இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.