close
Choose your channels

நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்பவர்கள் இந்த இருவரில் ஒருவரா?

Thursday, December 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நேரடியாக இறுதிப் போட்டிக்குச் செல்லும் ’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் முதல் நாளில் நிரூப் வெளியேற்றப்பட்டார் என்பதும், இதனை அடுத்து இரண்டாவது நாள் தாமரை மற்றும் பாவனி வெளியேற்றப்பட்டனர் என்பதும், நேற்றைய மூன்றாவது நாளில் ராஜு மற்றும் பிரியங்கா வெளியிடப்பட்டதை அடுத்து தற்போது போட்டியில் சிபி, அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய மூவர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று வைக்கப்படும் டாஸ்க்கில் வெற்றி பெறும் இருவர் அடுத்த கட்டத்துக்கு செல்வார்கள் என்றும் அந்த இருவரில் ஒருவருக்கு டிக்கெட் டு ஃபினாலே கிடைக்கும் என்பதும் அவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் பிக்பாஸ் சில கேள்விகளை கேட்கிறார். அந்த கேள்விக்கு போட்டியாளர் சொல்லும் பதிலும் ஹவுஸ்மேட்ஸ் சொல்லும் பதிலும் ஒருமித்த கருத்தாக இருந்தால் அந்த போட்டியாளர் ஒரு கட்டம் முன்னேறி செல்வார். இதன்படி ஒவ்வொரு கட்டமாக முன்னேறி செல்லும் முதல் இருவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றர்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவை பார்க்கும்போது சிபி மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடுத்தகட்டத்திற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.