close
Choose your channels

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இந்த இருவரில் ஒருவரா?

Friday, November 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து நாடியா சாங், அபிஷேக் மற்றும் சின்ன பொண்ணு ஆக்யோர் வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம் வெளியேறுபவர் யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

இந்த வார நாமினேஷனில் ஒன்பது பேர் உள்ள நிலையில் இவர்களில் சுருதி மற்றும் அபினய் ஆகியோர் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. எனவே இந்த இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் சுருதியிடம் தாமரையிடம் இருந்து கைப்பற்றிய காயின் இருப்பதால் அதனை பயன்படுத்தி அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். ஆனால் அதே நேரத்தில் நாமினேஷனில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள காயினை பயன்படுத்தலாம் என்று பிக்பாஸ் கூறியபோது சுருதி உள்பட காயின் வைத்திருந்த அனைவருமே தாங்கள் அந்த காயினை பயன்படுத்தவில்லை என்று கூறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுருதி ஒருவேளை காயின் மூலம் காப்பாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் அடுத்ததாக குறைந்த வாக்குகள் பெற்றிருக்கும் அபினய் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.