close
Choose your channels

'பிக்பாஸ் 3' டைட்டில் வின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு

Tuesday, January 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ’பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டவர் மலேசியாவை சேர்ந்த முகின் ராவ். இவர் கடைசி சில வாரங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டதும், குறிப்பாக கடைசி ஒரு சில நாட்களில் ஒரு ஹிட் பாடலை பாடியதுமே இவர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட காரணம் என்று கூறப்படுவதுண்டு.

இந்த நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகின்ராவ் வீட்டில் ஒரு மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது. முகின்ராவ் தந்தை பிரகாஷ்ராவ் அவர்கள் காலமாகி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பிரகாஷ் ராவ் அவர்களின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மிகப்பெரிய இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தகவல் அறிந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் பலர் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தந்தையை இழந்து வாடும் முகின் ராவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.