close
Choose your channels

அனைத்து ஸ்க்ரீன்களிலும் 'பிகில்' தான்: சென்னை திரையரங்கின் நிர்வாக இயக்குனர் டுவீட்!

Wednesday, October 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும், புரமோஷன் பணிகளும் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படத்தின் வியாபாரமும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இந்த நிலையில் தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘பிகில்’ படத்துடன் கார்த்தியின் ‘கைதி’ மற்றும் விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டும் சென்னையின் முக்கிய திரையரங்க வளாகமான ரோஹினி திரையரங்கின் நிர்வாக இயக்குனர் தனது டுவிட்டரில் தீபாவளி அன்று ரோஹினி திரையரங்க வளாகத்தின் அனைத்து ஸ்க்ரீன்களிலும் ‘பிகில்’ படத்தை மட்டுமே திரையிடப்போவதாக அறிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு ரோஹினி மட்டுமின்றி ஆவடி மற்றும் திண்டிவனத்தில் உள்ள ரோஹினி காம்ப்ளக்ஸ் திரையரங்குகளிலும் முதல் நாளில் ‘பிகில்’ மட்டுமே திரையிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ’பிகில்’ திரைப்படம் தமிழகத்திலேயே முதல் காட்சி ரோஹினியில் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதால் இந்த படம் நள்ளிரவுக்காட்சி திரையிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.