close
Choose your channels

கோலிவுட் ஸ்டிரைக் எதிரொலி: ஆடு மேய்க்க போன பிரபல தமிழ் நடிகை

Thursday, April 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் இருப்பதால் பெரிய நடிகர், நடிகைகள் முதல் சின்ன நடிகர், நடிகைகள் வரை வீட்டில் ஓய்வு எடுத்தும், வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாவுக்கும் சென்று வருகின்றனர். அந்த வகையில் பிரபல தமிழ் நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவருமான பிந்துமாதவி, ஆந்திராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று ஆடுமேய்த்து வருகிறார். இதனை அவர் தனது சமூக  வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் உள்ள தனது சொந்த ஊரான தேவரிந்துபள்ளிக்கு சென்றுள்ளதாக பதிவு செய்து செய்துள்ள பிந்துமாதவி, அங்கு ஆடு மேய்ப்பது, மண்பானையில் சமைத்து சாப்பிடுவது, குல தெய்வ கோவிலுக்கு நடந்து சென்று வழிபடுவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளாராம்.

மேலும் இதுகுறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள பிந்துமாதவி, நகரத்தில் இருந்து கிராமம் வந்து பொழுதை கழிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.