close
Choose your channels

ரஜினியுடன் கூட்டணி வைத்தால் நாசமாகிவிடும்: சுப்பிரமணியன் சுவாமி

Saturday, May 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாஜக மேலிடம் இன்று வரை ரஜினியுடன் கூட்டணி வைப்பதையே விரும்புவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி ஆரம்பம் முதலே ரஜினி, கமல் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இவருடைய விமர்சனத்திற்கு கமல்ஹாசன் அவ்வப்போது பதிலடி கொடுத்தாலும் ரஜினி அமைதியாகவே உள்ளார்

இந்த நிலையில் சமீபத்தில் மோடியுடன் ரஜினிகாந்த் கூட்டணி வைத்தால்  அவர் முதல்வராகிவிடலாம் என துக்ளக் ஆசிரியர் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி நேற்று அளித்த பேட்டியில் மீண்டும் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தார்

நடிகர்கள் அரசியலில் சாதித்த காலம் மலையேறிவிட்டதாகவும், இனிமேல் வரும் நடிகர்கள் அரசியலில் சாதிக்க முடியாது என்றும் கூறிய சுப்பிரமணியன் சுவாமி, ரஜினி போன்ற படிப்பறிவில்லாதவர்களுடன் கூட்டணி வைத்தால் நாசம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.