close
Choose your channels

தெருவில் பழம் விற்கும் நடிகர்: ஊரடங்கால் ஏற்பட்ட பரிதாபம்

Friday, May 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியாவில் பல்வேறு துறைகளில் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திரைத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சின்ன நடிகர்கள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். இவர்களுக்கு பெரிய நடிகர்கள் ஒரு சிலர் உதவிகள் செய்து வந்தாலும் அந்த உதவிகள் போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆயுஷ்மான் குரானாவுடன் ’ட்ரீம் கேர்ள்ஸ்’ என்ற படத்தில் நடித்த நடிகர் சோலங்கி திவாகர் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக எந்தவித வாய்ப்பும், வருமானமும் இல்லாததால் தனது அன்றாட செலவிற்காக தெருவில் பழம் விற்று வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பாலிவுட் நடிகர் ஒருவர் வாய்ப்புகள் இன்றி வருமானம் இன்றி தெருவில் பழம் விற்கும் தகவல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.