close
Choose your channels

'தர்பார்' விவகாரம்: ஒருவர் திடீர் கைது

Tuesday, January 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி நான்கே நாட்களில் ரூபாய் 150 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் இந்த படத்தை ஓடவிடாமல் செய்ய ஒரு சிலர் குறுக்கு வழியில் முயற்சித்து வருகின்றனர். கேபிள் டிவியில் ஒளிபரப்பியும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக ஒளிபரப்பியும் செய்து கொண்டிருக்கும் சிலர் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்

இந்த நிலையில் மதுரையில் நேற்று தர்பார் திரைப்படம் கேபிள் டிவியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பிய தகவல்கள் வெளிவந்தது. இதனை அடுத்து ரஜினி மக்கள் மன்றத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் தற்போது கேபிள் டிவியில் ஒளிபரப்பிய லோக்கல் சேனல் உரிமையாளர் மதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.