close
Choose your channels

'இந்தியன் 2' விபத்து குறித்த கமல்ஹாசன் மனு: சென்னை ஐகோர் அதிரடி உத்தரவு

Tuesday, March 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து தொடர்பாக சம்பவ இடத்தில் ஆஜராகி கமலஹாசன் அந்த விபத்தை நடித்துக் காட்ட வேண்டுமென துன்புறுத்தப்படுவதாக கமல்ஹாசன் தரப்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது

இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இன்று மாலை இந்த வழக்கை விசாரணை செய்ய ஒப்புக் கொண்டது. இதனை அடுத்து சற்று முன் இந்த மனு விசாரணை செய்யப்பட்ட நிலையில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து தொடர்பாக சம்பவ இடத்தில் கமலஹாசன் ஆஜராகி விளக்கம் அளிக்க தேவையில்லை என்றும் விசாரணைக்குத் தேவைப்பட்டால் மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

இருப்பினும் விபத்து நடந்த இடத்தில் நாளை ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என இயக்குநர் ஷங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.