close
Choose your channels

விஜய் மேல்முறையீட்டு வழக்கில் முக்கிய உத்தரவு!

Thursday, July 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்தார். அந்த காருக்கு அவர் இறக்குமதி வரி கட்டிய நிலையில் நுழைவு வரி கட்ட வேண்டும் என்ற கூறப்பட்டதை அடுத்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அவருக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்ததோடு விஜய் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்தார். இதனை அடுத்து தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பில் தன்னை பற்றி கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும் கோரி மேல்முறையீடு செய்தார்.

விஜய்யின் இந்த மேல்முறையீட்டு வழக்கை பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது இதனையடுத்து இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு விசாரணைக்கு வர உள்ளதாக நேற்று செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.