close
Choose your channels

ஷங்கர் மீது லைகா தொடுத்த வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Thursday, April 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்புக்கு ஆரம்பத்திலிருந்து பல்வேறு இடைஞ்சல்கள் வந்தது என்பதும் அதன் பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து கொரோனா வைரஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் இந்த படம் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இதனை அடுத்து ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. லைகா நிறுவனம் தனது மனுவில் ’கமல் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்திற்கு 150 கோடி பட்ஜெட் போடப்பட்டதாகவும், ஆனால் இதுவரை இந்த படத்திற்கு 256 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் இயக்குனர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில் அவருக்கு இதுவரை 14 கோடி வழங்கப்பட்டு விட்டதாகவும் எனவே இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் அவர் வேறு படத்தை இயக்க கூடாது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தது

இந்த நிலையில் இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது இயக்குனர் ஷங்கர் வேறு படங்களை இயக்க கூடாது என இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.