close
Choose your channels

சின்மயி கோரிக்கையை தள்ளுபடி செய்த சென்னை காவல்துறை!

Friday, May 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை உச்சநீதிமன்றம் உரிய முறையில் விசாரிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி பின்னணி பாடகி சின்மயி சென்னை காவல்துறைக்கு மனு ஒன்றை விண்ணப்பித்திருந்தார்.

இந்த மனுவை பரிசீலனை செய்த சென்னை காவல்துறை பாடகி சின்மயி போராட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. பாடகி சின்மயி மனுவை பரீசீலனை செய்ததாகவும், நீதித்துறைக்கே எதிராக நடைபெறும் போராட்டமாக இதனை கருதுவதால் இந்த போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் காவல்துறை விளக்கம் அளித்து அவரது விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக மே 12ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 3.30 மணிக்கு போராட்டம் நடத்த பாடகி சின்மயி அனுமதி கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.