close
Choose your channels

மாறி மாறி ஒருவரை ஒருவர் பாராட்டி கொண்ட சேரன் - செல்வராகவன்!

Wednesday, November 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் செல்வராகவன் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பாராட்டிக் கொண்டும் நன்றி தெரிவித்துக் கொண்டும் இருந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான செல்வராகவன் சமூக வலைதளங்களிலும் பிரபலம் என்பதும், தனது மனைவி மற்றும் குழந்தைகள் குறித்த புகைப்படங்களை அவ்வப்போது அவர் பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர், ‘வாழ்க்கை முடிந்தது, இனி மேல் ஒன்றுமில்லை என்று நினைக்கும் போதெல்லாம், கடவுள் ஒரு கதவை திறபார். வேதனை இன்றி விடியல் இல்லை’ என்று பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவை பார்த்த இயக்குனர் சேரன் அவருக்கு பாராட்டு தெரிவித்து, ‘சில நேரம் வேதனையை அனுபவிக்கும் மனிதனாக இருப்போம், சில சமயம் கதவுகளை திறக்கும் கடவுளாக இருப்போம். உங்கள் படங்களால் வாழ்க்கை உயர்வு அடைந்தவர்களுக்கு நீங்கள் கடவுளைப் போல’ என்று பதிவு செய்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்த இயக்குனர் செல்வராகவன், ‘உங்களது ஆட்டோகிராஃப் உள்பட பல படங்கள் எங்களுக்கு ஆறுதலாக இருந்தது என்றும் தங்களின் படங்களை எதிர்பார்க்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்’ என்று கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் தரமான படங்களை தந்த இயக்குனர்களான சேரன் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டும் நன்றி தெரிவித்துக் கொண்டும் இருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.