close
Choose your channels

சிரஞ்சீவி பயணம் செய்த விமானத்தில் திடீர் கோளாறு: பரபரப்பு செய்தி

Saturday, August 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மெகா ஸ்டார் சிரஞ்சீவி பயணம் செய்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொழில்முறை காரணமாக மும்பை சென்றிருந்த நடிகர் சிரஞ்சீவி, மீண்டும் ஐதராபாத் திரும்புவதற்கு தனியார் விமானம் ஒன்றில் பயணம் செய்துள்ளார். விமானம் ஐதராபாத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மீண்டும் விமானம் மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது. இந்த விமானத்தில் 120 பயணிகள் பயணம் செய்ததாகவும், அவர்களில் ஒருவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட மாற்று விமானத்தில் அனைவரும் ஐதராபாத் திரும்பினர். தொழில்நுட்ப கோளாறு குறித்து விசாரணை நடந்து வருகிறது

இந்த நிலையில் சிரஞ்சீவி நடித்து முடித்துள்ள 'சயிர நரசிம்ம ரெட்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.