close
Choose your channels

அனிதா அஞ்சலி நிகழ்ச்சியில் அமீர்-ரஞ்சித் கருத்து மோதல்

Friday, September 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரியலூர் மாணவி அனிதாவுக்கு இயக்குனர் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னணி இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் பேசியபோது, 'நாம் எல்லாம் சாதி மதங்களை கடந்து தமிழனாக, சமத்துவமாக இருக்கிறோம்' என்றும் சாதிகளை களைந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்' என்றும் பேசினார். அப்போது மேடைக்கு வந்த இயக்குனர் பா.ரஞ்சித், 'நாம் ஜாதியால் பிரிந்திருக்கின்றோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எத்தனை நாளுக்கு தமிழ், தமிழன் என்று கூறுவீர்கள், இங்கு சமத்துவம் இல்லை என்றும் ஆவேசமாக பேசினார்.

இதனையடுத்து பேசிய அமீர், 'இயக்குனர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் அதை பேசி தீர்த்து கொள்வோம். இந்த கருத்துவேறுபாடு எங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தாது. எனவே ஊடகங்கள் இதை பெரிதுபடுத்த வேண்டாம்' என்று வேண்டுகோள் விடுத்தார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.