close
Choose your channels

எனது குடும்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சனையை தீர்த்தவர் தனுஷ்: பிரபல காமெடி நடிகர்

Monday, February 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எனது குடும்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சினையை தீர்த்து வைத்தவர் தனுஷ்தான் என்றும் அவரால் தான் நான் இன்று சந்தோசமாக இருக்கிறேன் என்றும் பிரபல காமெடி நடிகர் ஒருவர் கூறியுள்ளார்

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். இவர் தனுஷின் ’மாரி’ படத்தில் மூலம் பிரபலமானார் என்பதும் அதன்பின்னர் அவருக்கு தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் ரசிகர் ஒருவரின் உணவகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரோபோ சங்கரும் அதில் பேசியதாவது:

தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை; வாழ்க்கை கொடுத்திருக்கிறார். தென்னிந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் தனுஷ்தான். கரோனா காலகட்டத்தில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய உதவியைச் செய்தார்.

ஒரு பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். பிறகு தனுஷுக்கு போன் செய்தேன். அப்போது அவர் டெல்லி கிளம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இதைக் கேட்கலாமா என்று யோசித்து தயக்கத்துடன் கேட்டேன். எனக்குக் குடும்ப ரீதியான மிகப்பெரிய உதவியைச் செய்தார்.

நான் இன்று என் குடும்பத்துடன் மூன்று வேளை நிம்மதியாகச் சாப்பிடுவதற்கான ஆரம்பப் புள்ளியைப் பல இயக்குநர்கள் வைத்திருந்தாலும், என் வாழ்க்கையை உயர்த்தியவர் தனுஷ்தான்.

இவ்வாறு ரோபோ ஷங்கர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.