close
Choose your channels

த்ரிஷ்யம் படத்தைப் புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட்டர் அஸ்வின்… என்ன சொன்னார் தெரியுமா?

Monday, February 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட்டின் முன்னணி வீரராக இருந்து வருகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இவரின் ஸ்பின் பந்து பட்டையைக் கிளப்பியது. தற்போது 3 ஆவது டெஸ்ட் போட்டிகளுக்காக அகமதாபாத்திற்கு சென்று இருக்கும் அவர், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் த்ரிஷ்யம் திரைப்படத்தை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். இப்படத்தில் மோகன்லால், மீனா ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டை அடுத்து தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அந்த மொழிகளிலும் இந்தப் படம் செம ஹிட் அடித்தது. அதையொட்டி தற்போது த்ரிஷ்யம் 2 ஆம் பாகம் வெளியாகி அதுவும் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்தப் படத்தைக் குறித்துத்தான் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய டிவிட்டர் பதிவில் கருத்துத் தெரிவித்து இருக்கிறார். அதில், “ஜார்ஜ் குட்டி நீதிமன்றத்தில் ஏற்படுத்திய திருப்பதை நினைத்து சத்தமாக சிரித்தேன். நீங்கள் விரும்பினால் மீண்டும் த்ரிஷ்யம் முதல் பாகத்தில் இருந்து படத்தை பார்க்கத் தொடங்குங்கள். Fabulous! Just fabulous” எனப் பாராட்டை தெரிவித்து உள்ளார்.

த்ரிஷ்யம் 2 ஆவது வெற்றியைத் தொடர்ந்து தமிழில் 2 ஆம் பாகத்திற்கான வேலைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல தெலுங்கிலும் இயக்குநர் ஜீத்து ஜோசப் இதற்கான வேலையை ஏற்கனவே துவக்கி விட்டதாக அறிவித்து உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கான வெற்றியைக் குறித்தும் டிவிஸ்ட் கொண்ட கதையம்சம் குறித்தும் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.