close
Choose your channels

'மாநாடு' ரிலீசுக்கு கடைசி நேரத்தில் உதவி செய்தவர் இவரா? வைரலாகும் டுவிட்!

Thursday, November 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று ரிலீஸ் ஆகியது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த படம் இன்று ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட நிலையில் விடிய விடிய நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இன்று காலை 8 மணி முதல் ‘மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடைசி நேரத்தில் ‘மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் செய்ய ஒரு சில திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ‘மாநாடு’ திரைப்படம் ரிலீசுக்கு உதவியவர்களில் ’மங்காத்தா’ திரைப்பட தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியும் ஒருவர் என டுவிட்டரில் செய்தி கசிந்தது.

இதற்கு பதிலளித்துள்ள தயாநிதி அழகிரி, ‘சத்தியமா நான் இல்லை. எல்லோரையும் போல ‘மாநாடு’ திரைப்படம் நல்லபடியாக வெளியாக வேண்டும் என்று நான் விரும்பினேன். படம் நல்லபடியாக வெளியாகி வெற்றி பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார்.

எனவே ‘மாநாடு’ திரைப்படத்திற்கு கடைசி நேரத்தில் உதவி செய்தவர் தயாநிதி அழகிரி இல்லை என்பது இந்த டுவிட்டில் இருந்து தெரிய வருகிறது. அப்படி என்றால் ‘மாநாடு’ திரைப்படத்தின் ரிலீசுக்கு உண்மையில் உதவியது யார் யார் என்பது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஓப்பனாக கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.