close
Choose your channels

மீண்டும் மாஸ்-ஆக ரீ-என்ட்ரி கொடுக்கும் டிடி....! அதுவும் முக்கிய சிறப்பு விருந்தினருடன்....!

Thursday, August 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

கடந்த சில வருடங்களாக டிடி எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெறாமல் இருந்தார். அதற்கு முன் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ், விஜய் அவார்ட்ஸ் மற்றும் எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடி வருவார். அண்மையில் கூட ரசிகர் ஒருவர் மீண்டும் எப்போது நிகழ்ச்சிகளுக்கு வருவீர்கள் என்று கேட்டிருந்தார்....? எனக்கும் வரவேண்டும் என்று ஆசை தான், கால் கொஞ்சம் பிரச்சனையாக உள்ளது, அது சரியான பின்பு என் வேலைகளை தொடர்வேன் என்று கூறியிருந்தார்.


இந்நிலையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது "காபி வித் டிடி" என்ற நிகழ்ச்சி மூலம் திவ்யதர்ஷினி மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளாராம். அதில் முதல் சிறப்பு விருந்தினராக நயன்தாரா கலந்து கொண்டுள்ளாராம். நயன் நடித்திருந்த நெற்றிக்கண் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இதில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த நயன் மற்றும் டிடி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.