close
Choose your channels

தென்னிந்திய ஹீரோவுக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே: பரபரப்பு தகவல் 

Thursday, March 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தீபிகா படுகோனே ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கோச்சடையான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு தென்னிந்திய ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி', 'பாகுபலி 2’ சூப்பர் ஹிட் படங்களில் நடித்த பிரபாஸ் தற்போது ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிக்கும் 21வது படத்தை நாக் அஸ்வின் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடித்த ’நடிகையர் திலகம்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் இந்த திரைப்படத்தில் நாயகியாக தீபிகா படுகோனே நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பது குறித்து தீபிகா படுகோனேவிடம் நாக் அஸ்வின் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த படத்தின் கதை மற்றும் தன்னுடைய கேரக்டர் குறித்து கேட்ட தீபிகா படுகோனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் தெலுங்கு திரைப்படத்தில் முதன்முதலாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.