close
Choose your channels

எங்க கை வச்சு தள்றான் தெரியுமா என்னை? ஆவேசமாகும் தனலட்சுமி!

Thursday, October 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கில் இரண்டு குழுவினராக பிரிந்து ஒருவருக்கொருவர் மோதி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஷெரின் நேற்று தனக்கு அடிபட்டது போன்ற ஒரு நாடகத்தை நடத்தினார் என்பதும் தனலட்சுமி மீது அசீம் வீண் பழி சுமத்தினர் என்பதும் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் போட்டியாளர்கள் மத்தியில் இரண்டு பிரிவுகள் இருப்பது வழக்கமாக இருக்கும் நிலையில் இந்த பொம்மை டான்ஸ் மூலம் 6வது வது சீசனிலும் இரண்டு பிரிவுகள் உருவாகிவிட்டது.

ஷிவின், தனலட்சுமி உள்பட ஒருசிலர் ஒரு பிரிவிலும், அசீம், மகேஸ்வரி உள்பட ஒரு சிலர் இன்னொரு பிரிவில் உள்ளனர். இந்த இரு பிரிவுகளும் திட்டம் போட்டு ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமி மிக ஆவேசமாக அசீம் மீது குற்றம்சாட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ‘அவன் என்னை எங்கே கைவைத்து தள்றான் தெரியுமா? அவனை நான் சும்மா விடமாட்டேன்’ என தனலட்சுமி ஆவேசமாகப் பேச தனலட்சுமிக்கு ஆதரவாக விக்ரமன் அசீமிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். தனலட்சுமியை எங்கே கைவைத்து அசீம் தள்ளிவிடுகிறார் என்பது இன்றைய முதல் புரமோ வீடியோவில் தெள்ளத்தெளிவாக தெரிவதால் அசீமுக்கு இந்த முறை ஆப்பு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் இந்த பஞ்சாயத்தை தீர்க்கும் ஒரே நபர் கமல்ஹாசன் மட்டும்தான் என்பதால் இந்த வாரம் கொஞ்சம் கடுமையாகவே கமல்ஹாசன் தவறு செய்த போட்டியாளர்களை கண்டிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.