close
Choose your channels

தனுஷூடன் 4வது முறையாக இணையும் பிரபல இயக்குனர்

Wednesday, February 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் தற்போது நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம் என பிசியான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனுஷ் தற்போது 'பவர்பாண்டி' என்ற படத்தை இயக்கி வருவதோடு, கவுதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் வெற்றிமாறனின் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் விரைவில் ஹாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தனுஷ் நடித்த 'கொடி' படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் மீண்டும் தனுஷூக்காக ஒரு கதையை எழுதி வருவதாகவும் விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரியவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவலை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே தனுஷின் தயாரிப்பில் உருவான 'எதிர்நீச்சல்' மற்றும் 'காக்கி சட்டை' ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் கடந்த ஆண்டு தனுஷ் நடித்த 'கொடி' படத்தையும் இயக்கினார். இந்நிலையில் தற்போது நான்காவது முறையாக தனுஷூடன் அவர் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.