close
Choose your channels

தனுஷ்-பிரபுசாலமன் படத்தில் வில்லன்?

Monday, October 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'மாரி' படத்தை அடுத்து தனுஷ் நடித்து வரும் 'விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் மிக விரைவில் அறிவிக்கப்படும் என தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மற்றொரு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரயிலில் நடைபெறுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரிசா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் முக்கியமான ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பிரபுசாலமன் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் சண்டைப்பயிற்சி அளிக்கும் இந்த படத்தில் வில்லனாக ஹரீஷ் உத்தமன் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.