close
Choose your channels

சென்னை திரும்பியதும் ஐதராபாத் செல்லும் தனுஷ்: ஏன் தெரியுமா?

Monday, June 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷ் தற்போது ’தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடைந்து அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் சென்னை திரும்பியதும் ஒரு சில நாட்களில் ஐதராபாத் செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தனுஷின் அடுத்த படமான 'D43' என்ற திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார் என்பதும் ஏற்கனவே ஒரு சில கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் 'D43' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பும் தனுஷ் ஒரு சில நாட்களில் ஹைதராபாத்திற்கு 'D43' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தை முடித்தவுடன் நடிகர் தனுஷ், செல்வராகவன் இயக்கும் ’நானே வருவேன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.