close
Choose your channels

தனுஷ்-பிரபுசாலமன் படத்தின் மிரட்டலான டைட்டில்

Friday, January 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தங்கமகன்' படத்தை அடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள இன்னும் பெயரிடப்படாத 'படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு 'ரயில்' என்ற டைட்டில் வைக்க படக்குழுவினர் பரிசீலித்து வருவதாக நேற்று செய்திகள் வெளியாகியது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்திற்கு 'மிரட்டு' என்ற டைட்டிலை படகுழுவினர் தேர்வு செய்துள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ரயில்வே கேண்டீனில் பணிபுரியும் பூச்சியப்பன் என்ற கேரக்டரில் தனுஷும், சரோஜா என்ற ரயில் பயணியாக கீர்த்தி சுரேஷுடம் இந்த படத்தில் நடித்துள்ளனர். கேண்டீன் ஊழியர் தனுஷூக்கும் கேரள பெண் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்படும் காதலை விறுவிறுப்பான திரைக்கதையுடன் முழுக்க முழுக்க ரயிலில் படமாக்கியுள்ளார் இயக்குனர் பிரபுசாலமன். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.