close
Choose your channels

தளபதி என்னை ஒரு நாள் கூப்பிடுவார்: நம்பிக்கையுடன் காத்திருக்கும் பிரபல இயக்குனர்!

Monday, March 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் என்னை ஒருநாள் கூப்பிடுவார் என நம்பிக்கையோடு காத்திருப்பதாக பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

‘நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அல்போன்ஸ் புத்திரன், அதன்பிறகு அவர் இயக்கிய ’பிரேமம்’ என்ற திரைப்படம் இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் பகத் பாசில், நயன்தாரா நடித்து வரும் ’பாட்டு’ மற்றும் பிரித்விராஜ், நயன்தாரா நடித்து வரும் ‘கோல்ட்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார் என்பதும் இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலை புகழ்ந்து உள்ள பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம் ரசிகர் ஒருவர் தளபதியை வைத்து நீங்கள் எப்போது ஒரு காதல் படம் இயக்குவீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அல்போன்ஸ் புத்திரன், ‘என்னுடைய ‘பிரேமம்’ திரைப்படம் ரிலீஸ் ஆனவுடன் தமிழகத்தில் இருந்து எனக்கு வந்த முதல் அழைப்பு தளபதி விஜய்யிடம் இருந்து தான் என்றும் அவருடைய மேனேஜர் மூலம் வந்த இந்த அழைப்பை அடுத்து தளபதி விஜய்யை நேரில் நான் சந்தித்தேன் என்றும் கண்டிப்பாக ஒரு நாள் அவர் என்னை ஒரு திரைப்படம் இயக்க அழைப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அவரது காத்திருப்பு வீண் போகாது என்றும் விரைவில் விஜய் அவரை அழைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.