close
Choose your channels

பெப்சி அமைப்புக்கு இயக்குனர் பாண்டிராஜ் கொடுத்த தொகை!

Monday, April 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இந்தக் காரணத்தால் தினசரி தொழிலாளர்கள் பலரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோளை அடுத்து ரஜினி, அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்தனர். சிலர் அரிசி மூட்டைகளாகவும் உதவி செய்துள்ளனர். இந்த உதவி காரணமாக தற்போது பெப்சி தொழிலாளர்கள் பசியின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரபல இயக்குனர் பாண்டிராஜ் தனது பங்காக பெப்சி அமைப்பிற்கு ரூ.2 லட்சம் அளித்துள்ளதாக சற்றுமுன் செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் ஊரடங்கு முடிய 13 நாட்கள் இருப்பதால் மேலும் சில கோலிவுட் பிரபலங்கள் நிதியுதவி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.