close
Choose your channels

நடிகர் சாயாஜி ஷிண்டே மீது திடுக்கிடும் புகார்.. காவல்துறையினர் விசாரணை

Wednesday, December 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல குணச்சித்திர நடிகர் சாயாஜி ஷிண்டே மீது இயக்குனர் ஒருவர் திடுக்கிடும் புகார் அளித்ததை அடுத்து இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

’பாரதி’ என்ற திரைப்படத்தில் சுப்பிரமணிய பாரதி கேரக்டரில் கச்சிதமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர் நடிகர் சாயாஜி ஷிண்டே. அதன்பின் இவர் ’பூவெல்லாம் உன் வாசம்’ ’பாபா’ ’தூள்’ ’படிக்காதவன்’ ’வேட்டைக்காரன்’ ’வேலாயுதம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகர் சாயாஜி ஷிண்டே மீது இயக்குனர் சச்சின் என்பவர் காவல் துறையில் புகார் அளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் சச்சின் தனது தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் நடிக்க சாயாஜியை ஒப்பந்தம் செய்தார். ரூபாய் 5 லட்சம் சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்கும் தேதியில் திடீரென திரைக்கதையை மாற்றுமாறு சாயாஜி ஷிண்டே கூறியதாகவும் அதனால் சச்சின் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிகிறது.

இதனையடுத்து அவரது கோரிக்கையை நிறைவேற்றாததால் படத்தில் இருந்து வெளியேறுவதாக கூறியதாகவும் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி தருவதாக கூறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இயக்குனர் சச்சின் பலமுறை சாயாஜி ஷிண்டேவை தொடர்பு கொண்ட போதும் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

இதனை அடுத்து அவர் காவல் நிலையத்திலும், திரைப்பட சங்கத்திலும் புகார் அளித்துள்ளார். சாயாஜிக்கு தான் 5 லட்சம் சம்பளமாக கொடுத்ததாகவும் அதுமட்டுமின்றி அவரால் ஏற்பட்ட இழப்புக்களுக்கு 17 இலட்சம் கூடுதலாக அவர் செலுத்த வேண்டும் என்றும் மொத்தம் 22 லட்சம் அவர் தனக்கு தர வேண்டும் என்றும் காவல் துறையில் புகார் அளித்து உள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.