close
Choose your channels

இரண்டாவது தற்கொலை: இயக்குனர் சசிகுமார் நெருக்கமானவர்களுக்கு தொடரும் சோகம்

Tuesday, November 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர், நடிகர் சசிகுமாரின் மேனேஜர் உதயகுமார் என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று அவருடைய நெருங்கிய உறவினர் அசோக் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்

சென்னை அபிராமிபுரத்தில் வசித்து வந்த இவர் இன்று மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

அசோக் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை வந்த பின்னரே இந்த தற்கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இருக்கும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்கொலைக்கு முன்னர் அசோக் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று சமூக  வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.