close
Choose your channels

அவர்களை இங்கிருந்து விரட்டியடிக்க ஒரே வழி இதுதான்: இயக்குனர் தங்கர்பச்சான் ஆவேசம்!

Sunday, May 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹிந்தி மொழியை தமிழகத்தில் திணிப்பவர்களை விரட்டியடிக்க ஒரே வழி இதுதான் என இயக்குனர் தங்கர்பச்சான் தனது சமூக வலைத்தளத்தில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார் .

தமிழகத்தில் இந்தி மொழியை திணிப்பதாக பல ஆண்டுகளாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ஜிப்மர் மருத்துவமனையில் ஹிந்தி மொழி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஹிந்தி மொழி திணிப்பு குறித்து இயக்குனர் தங்கர்பச்சான் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

வெறும் தமிழ் உணர்வை மாத்திரம் வைத்துக்கொண்டு தமிழ் மொழியை வளர்க்கவோ பாதுகாக்கவோ முடியாது! இந்திய ஒன்றிய அரசின் இந்தி மொழித்திணிப்பினை எதிர்க்க அனைத்துக்கட்சியினரும் ஒன்றிணைய மாட்டார்கள். அவர்களை இங்கிருந்து விரட்டியடிக்க ஒரே ஒரு வழிதான்!

நாம் அவர்களிடம் ஒரு சொல்கூட ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டுமே பேசினால் தமிழில் மட்டுமே எழுதினால் எக்காலத்துக்கும் தமிழ்நாட்டுக்குள் நுழையும் எண்ணம் வராது. ஆனால் நம்மால் இதைச்செய்ய முடியுமா? என்று தங்கர்பச்சான் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.