close
Choose your channels

திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Friday, December 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியதால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் பூரண நலம் பெற்று டிசம்பர் 7ஆம் தேதி வீடு திரும்பினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் தொண்டை மற்றும் நுரையிரல் தொற்றால் மீண்டும் காவேரி மருத்துவமனையில் நேற்று இரவு கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் மருத்துவமனை வட்டாரங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்," திமுக தலைவரும் , முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்படுள்ளார். அவருக்கு தொண்டை மற்றும் நுரையிரலில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக மூச்சுத்திறணல் ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்ட நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமாக உள்ளார். அவருக்கு மருத்துவ குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது' இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது மகள் கனிமொழி கூறும்போது," திமுக தலைவர் கருணாநிதிக்கு நுரையிரலில் தொற்று ஏற்பட்டதால் மூச்சு திறணல் காரணமாக அவதிப்பட்டார். தற்பொழுது மருத்துவமனையில் அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் நலமாக உள்ளார்." என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.