close
Choose your channels

'திரெளபதி' இயக்குனரின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Saturday, April 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ’திரெளபதி’ 'ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் அவரது அடுத்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது .

இயக்குனர் மோகன் ஜி இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் செல்வராகவன் நடிக்கிறார் என்பதும் மற்றொரு முக்கிய வேடத்தில் நட்டி நட்ராஜ் நடிக்கிறார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் ‘விக்ரம்வேதா’ புகழ் சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு திங்கள் முதல் தொடங்க இருப்பதாக இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

முத்துமலை முருகன் அருளுடன் இன்று இனிய பூஜை நடைபெற்றது. அடுத்த படத்தின் தலைப்பு ’பகாசூரன்’. திங்கள் முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என்று மோகன்ஜி தெரிவித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.