close
Choose your channels

கெடு முடிந்தது. நாளை ரஜினி வீடு முன் போராட்டம். தமிழர் அமைப்பு அறிவிப்பு

Sunday, December 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எந்திரன் 2' நாயகி எமிஜாக்சன் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டை தடை செய்ய கூறியதால் அவரை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழர் அமைப்பு ஒன்று மூன்று நாள் கெடு கொடுத்து எச்சரிக்கை விடுத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் மூன்று நாள் கெடு இன்றுடன் முடிவடைவதால் நாளை ரஜினிகாந்த் வீடு முன்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அந்த அமைப்பு நோட்டீஸ் அடித்து விளம்பரப்படுத்தியுள்ளது.

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய சொன்ன எந்திரன் 2' படத்தின் கதாயகி எமிஜாக்சனை எந்திரன் 2' படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், தமிழர் பண்பாடு, நாகரீகம் வாழ்வியல் நெறி இவைகளில் சிதைக்கும் வகையில் தொடர்ந்து கருத்து சொல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ள அந்த அமைப்பு நாளை மதியம் 12 மணிக்கு போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.