close
Choose your channels

இன்று முதல் 'எந்திரன் 2' படப்பிடிப்பு ஆரம்பம். ஷங்கரின் அதிகாரபூர்வ அறிவிப்பு

Wednesday, December 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாகுபலி' ரிலீசுக்கு முன்புவரை தென்னிந்தியாவின் அதிக வசூல் பெற்ற படம் என்ற புகழை பெற்றிருந்த 'எந்திரன்' படத்தின் வெற்றிக்கு பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் 'எந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படம் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் அர்னால்ட் நடிப்பதாக இருந்து பின்னர் அவர் இந்த படத்தில் இருந்து விலகியதாக வந்த செய்தியை அடுத்து வில்லன் நடிகரை தேடும் பணியும் ஒருபக்கம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகை எமிஜாக்சன் பெண் ரோபோவாக நடிக்கவுள்ளார். ஹாலிவுட் தரத்தில் பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தயாரிக்கபடவுள்ள இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.