close
Choose your channels

நடிகை சாந்தினியை அடுத்து மணிகண்டனின் மனைவியும் புகார்! பெரும் பரபரப்பு!

Tuesday, June 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த புகாரின் பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில் தற்போது திடீரென முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி வசந்தி என்பவரும் காவல் துறையில் புகார் அளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சற்றுமுன் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மனைவி வசந்தி அளித்த புகாரில் ’தனது குடும்ப வாழ்க்கையை சிதைக்கும் நோக்கத்தோடு பொய்யான புகாரை சாந்தினி கொடுத்துள்ளதாகவும் இதனால் தனக்கும் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதனை அடுத்து பொய்யான புகார் கொடுத்த நடிகை சாந்தினி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் என்பவரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மதுரை ஐஜி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து இந்த வழக்கை நடத்தி வரும் சென்னை அடையாறு காவல் நிலையத்திற்கு அனுப்ப உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.