close
Choose your channels

சசிகுமாரின் அடுத்த படத்தில் நிஜ கைதிகள்: பரபரப்பான தகவல்

Thursday, December 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர், இயக்குனர் சசிகுமார் நடிக்கவிருக்கும் ’பகைவனுக்கு அருள்வாய்’ என்ற திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் இந்த படத்தை ’திருமணம் என்னும் நிக்கா’ என்ற படத்தை இயக்கிய அனிஸ் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

சமூக கருத்துடன் கூடிய த்ரில்லர் திரைப்படமான இந்த படத்தில் நாயகிகளாக வாணிபோஜன் மற்றும் பிந்து மாதவி நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் பாரதியாரின் கவிதைகளில் இருந்து எடுத்ததாக இயக்குனர் அனீஸ் கூறினார். பாரதியாரின் கவிதைகளில் உள்ள இந்த வார்த்தைகள் கொண்ட டைட்டில் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’லூசியா’ படத்தில் நடித்த சதீஷ் நடிக்கவிருப்பதாகவும், மேலும் நாசர், ஜெயப்பிரகாஷ் உட்பட ஒரு சில முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும் இந்த படம் கைதிகள் குறித்த கதையம்சம் கொண்டது என்பதால் உண்மையான கைதிகளை நடிக்கவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஏற்கனவே கைதிகளாக இருந்து விடுதலையான சிலரை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.