close
Choose your channels

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் நான்கு ஹீரோக்கள்?

Thursday, August 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்திற்கு பின்னர் அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி தவிர மேலும் மூன்று ஹீரோக்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரபு-கார்த்திக் நடித்த 'அக்னி நட்சத்திரம், மோகன் - கார்த்திக் நடித்த 'மெளனராகம், ரஜினி-மம்முட்டி நடித்த 'தளபதி', மோகன்லால்-பிரகாஷ்ராஜ், நடித்த 'இருவர், விக்ரம்-பிரத்விராஜ் நடித்த 'ராவணன்' என இரண்டு ஹீரோகள் படங்களையும், சுர்யா, மாதவன், சித்தார்த் என மூன்று ஹீரோக்கள் நடித்த 'ஆயுத எழுத்து' போன்ற படத்தையும் இயக்கிய மணிரத்னம் தற்போது முதன்முதலாக நான்கு ஹீரோக்கள் படத்தை இயக்கவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இரண்டு ஹீரோக்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு ஹீரோக்கள் தேர்வு பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நான்கு ஹீரோக்கள் என்றால் நான்கு ஹீரோயின்கள் உண்டா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளதால் இந்த படத்தில் ஒரு நட்சத்திர கூட்டமே இருக்கும் என்று கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.