என் வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை: விபத்து குறித்து கவுதம் மேனன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் கவுதம் மேனன் நேற்று விபத்து ஒன்றில் சிக்கி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த செய்தியை பார்த்தோம். ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பிய இயக்குனர் கவுதம்மேனன், தான் விரைவில் நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறி டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
என் நலன் விரும்பிய , நலம்பெற வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி. வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை. இப்போது நலமாக இருக்கிறேன். எச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் செய்த உதவியால் மனிதாபிமானத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டேன். மீண்டும் படப்பிடிப்பு தொடங்க காத்திருக்கிறேன்' என்று கவுதம் மேனன் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கவுதம் மேனன் கார் மீது டெம்பர் லாரி மோதிய விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என் நலன் விரும்பிய , நலம்பெற வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி. வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை. இப்போது நலமாக இருக்கிறேன். எச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் செய்த உதவியால் மனிதாபிமானத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டேன். மீண்டும் படப்பிடிப்பு தொடங்க காத்திருக்கிறேன்.
— Gauthamvasudevmenon (@menongautham) December 7, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.