close
Choose your channels

திருமாவளவனுக்கு ஆறுதல் கூறிய காயத்ரி ரகுராம்!

Thursday, August 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சகோதரி பானுமதி என்பவர் நேற்று கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பானுமதி அவர்கள் திடீரென உயிரிழந்தது அவரது சகோதரர் திருமாவளவன் அவர்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்த நிலையில் திருமாவளவன் அவர்களுக்கு அரசியல் தலைவர்கள், பா.ரஞ்சித் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் திருமாவளவன் அவர்களின் சகோதரி இழப்பிற்கு நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம், தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து, அவருக்கு ஆறுதலும் கூறியுள்ளார். திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி அவர்கள் கொரோனாவால் மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன் என்றும், அவரது குடும்பத்திற்கு தனது இரங்கல் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் அவர்களுடன் கொள்கை அளவில் வேறுபட்டிருந்தாலும், அரசியல் நாகரீகம் கருதி காயத்ரி ரகுராம் இரங்கல் தெரிவித்துள்ளதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.