close
Choose your channels

தமிழகத்தின் தலையெழுத்தை ரஜினியால் மாற்ற முடியும்: துக்ளக் குருமூர்த்தி

Monday, January 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்கள் முன்னிலையில் அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது உறுதி என்று அறிவித்துள்ள நிலையில் மிக விரைவில் அவருடைய அரசியல் கட்சியின் பெயர், கொடி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக ஆன்மீக அரசியல் என்ற புதிய பாதையில் அரசியல் செய்யும் ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பேசிய துக்ளக் ஆசிரியரும் பாஜக ஆதரவாளருமான குருமூர்த்தி, 'ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்றும், திராவிட கழகங்களுடன் கூட்டணி வைக்காமல் இருக்க ரஜினி வகுத்த செயல் வியூகம்தான் ஆன்மீக அரசியல் என்றும் கூறினார். தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு இருப்பதாக கூறிய ஆடிட்டர் குருமூர்த்தி  கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆன்மிகத்தை மறக்கடித்துள்ளதாகவும், ஆன்மிகம் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், அதனை ரஜினியால் சரிசெய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். குருமூர்த்தி இவ்வாறு கூறியதை அடுத்து, ரஜினியுடன், பாஜக இணைந்து செயல்படவேண்டும் என குருமூர்த்தி கூறியிருப்பதை பரிசீலனை செய்வோம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ஆனால் ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.