close
Choose your channels

சாதி சண்டையை மூட்டுவதே பா.ரஞ்சித்தின் திட்டம்: எச்.ராஜா 

Friday, July 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து கூறிய ரஞ்சித், 'ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் தான் பேசியதை ஏற்றுக் கொண்டிருப்பார் எனவும், ராஜராஜனின் பேரன்கள் பல சாதியில் இருப்பதால் பிரச்சினையாக்கி விட்டதாகவும் தெரிவித்தார்.

பா.ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள பாஜக பிரமுகர் எச்.ராஜா, 'மாமன்னர் ராஜராஜ சோழன் இருந்திருந்தால் ரஞ்சித் இவ்வாறு பேசியிருக்கவே மாட்டார். சிலபேர் இப்படித்தான் இல்லாதவர் இருந்திருந்தால் என்று சொல்லி மழுப்புவர். உண்மையில் ராஜராஜன் காலத்தில் நிலம் என்பது தனிவுடமையில் கிடையாது. அனைத்து நிலங்களும் அரசாங்கத்திற்குத்தான் சொந்தம். 800 வருடங்களாகத்தான் நிலம் தனியார் வசம் உள்ளது. எனவே ரஞ்சித் பேசியது முழுக்க முழுக்க பொய்.

மேலும் பா.ரஞ்சித்தின் திட்டமிட்ட சதி என்னவெனில் இந்து சமுதாயத்தில் சாதிச்சண்டையை மூட்டி, அதன்மூலம் மதமாற்றம் செய்ய வேண்டும் என்பதுதான். ஆகவே ரஞ்சித்தின் செயலானது மதமாற்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதி என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.