close
Choose your channels

சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம்? சித்ரா தாயார் அதிர்ச்சி பேட்டி

Monday, December 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சித்ரா, கடந்த 9ஆம் தேதி தனியார் ஓட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு என்ன காரணம்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் சித்ராவின் தாய் விஜயா ஆகியோர் அளித்த அழுத்தம் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று 5-வது நாளாக ஹேமந்த் இடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே ஹேம்நாத்தின் குடும்பத்தினர், சித்ரா நடித்து வந்த தொலைக்காட்சி தொடரின் இயக்குனர், தயாரிப்பாளர், ஓட்டல் ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர். அதேபோல் சித்ரா உடலை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ஆர்டிஓ விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சித்ராவின் தாய் விஜயா, “எனக்கும் எனது மகளுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. நான் அவருடன் சண்டையிடவில்லை. எனது மகள் இறப்பதற்கு முன்னர் என்னிடம் போனில் பேசினார். சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம். ஆர்.டி.ஓ. விசாரணையில் அனைத்து விவரங்களையும் கூறியுள்ளோம். எந்தவொரு தாயும் மகளின் தற்கொலைக்கு காரணமாக இருக்க மாட்டார்” என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.