close
Choose your channels

மீண்டும் இணையும் 'ஆண்டவன் கட்டளை' ஜோடி

Tuesday, October 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ரித்திகாசிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஆண்டவன் கட்டளை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த வெற்றி ஜோடி மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு படம் நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை சமீபத்தில் பார்த்தோம். இந்த படத்தில்தான் மீண்டும் விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணைந்து ரித்திகாசிங் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.