close
Choose your channels

மறுபடியும் வைல்ட்கார்ட் போனா, வச்சு செய்வேன்: சுரேஷ் சக்கரவர்த்தி!

Tuesday, November 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சவாலான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி கடந்த ஞாயிறன்று திடீரென வெளியேறியது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவரது வெளியேற்றத்தின் பின்னனியில் பெரும் அரசியல் இருக்கலாம் என்றும் ஒரு சிலர் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அவர் தனது யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொல்கிறார். அப்போது கடந்த சீசனில் வனிதா சென்றது போல் மீண்டும் வைல்ட்கார்ட் போட்டியாளராக கூப்பிட்டால் நீங்கள் செல்வீர்களா என்று கேட்டபோது ’கண்டிப்பாக கூப்பிட்டால் செல்வேன். நீங்க இவ்வளவு அன்பு வைத்திருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் திரும்பவும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் எல்லாரையும் வச்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சோம் குறித்து அவர் கூறியபோது ’மற்றவர்களெல்லாம் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கின்றார்கள். ஆனால் சோம் மட்டும் இடுப்பில் இருந்து இறங்காத பிள்ளையாக இருக்கிறார் என்று கூறினார். மேலும் இன்னொரு ரசிகர் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பயந்து நீங்கள் வெளியே வந்து விட்டார்களா? என்று கேட்டபோது ’நான் ஏன் பயப்படவேண்டும்? அங்கிருக்கும் எல்லோரும் பல்லு புடுங்கின பாம்புகள். நான் யாரையும் பார்த்து பயப்படவில்லை. என்னை பார்த்து தான் எல்லோரும் பயந்தார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இனி தினசரி பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தனது யூடியூப் சேனலில் அவை ஒளிபரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.